வரும் 26ம் திகதி அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு தொடரும் என்று அறிவிப்பு
By: Nagaraj Thu, 22 Oct 2020 8:41:01 PM
ஊரடங்கு உத்தரவு... மட்டக்குளி, முகத்துவாரம், ப்ளுமென்டல், வெள்ளம்பிட்டி மற்றும் கிரேண்பாஸ் ஆகிய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 26ம் திகதி அதிகாலை 5 மணிவரை தொடரும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கொழும்பின் சில பகுதிகளில் பொலிஸ் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
மட்டக்குளி, புளுமெண்டல், கிரேண்பாஸ், மோதர மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய
பகுதிகளுக்கே இவ்வாறு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு,
கம்பஹா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் நோயாளிகளுக்கான மருந்துகளை
விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மத்திய தபால்
பரிமாற்றகத்தின் தபால் அத்தியட்சகர் அஸ்லாம் ஹசன் இதனைத் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலைகள் மற்றும் அரச மருந்தகங்களில் வழங்கப்படும் மருந்துகள்
இவ்வாறு விநியோகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.