Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று இரவு டெல்லி-நொய்டா எல்லை திறக்கப்படும் என அறிவிப்பு

இன்று இரவு டெல்லி-நொய்டா எல்லை திறக்கப்படும் என அறிவிப்பு

By: Nagaraj Sun, 13 Dec 2020 8:39:31 PM

இன்று இரவு டெல்லி-நொய்டா எல்லை திறக்கப்படும் என அறிவிப்பு

இன்று இரவு டெல்லி-நொய்டா எல்லை திறப்பு... வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சூழலில் இன்றிரவுக்குள் டெல்லி-நொய்டா எல்லை திறந்து விடப்படும் என டெல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் வாங்க வலியுறுத்தியும் அரியானா, பஞ்சாப் மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளில் ஒரு பிரிவினர் டெல்லி நோக்கிய பேரணியை தொடங்கினர்.

கடந்த நவம்பர் 26ந் தேதி முதல் தொடர்ந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தினால் தலைநகர் டெல்லி முடங்கியுள்ளது. விவசாயிகளுடன், அரசு பலசுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுக தீர்வு காணப்படவில்லை. விவசாயிகளின் போராட்டம் இன்று 18வது நாளாக நீடித்து வருகிறது. இதனை முன்னிட்டு டெல்லி எல்லையில் தொடர்ந்து பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.

border,vehicles,traffic,tonight,negotiation ,
எல்லை, வாகனங்கள், போக்குவரத்து, இன்றிரவுக்குள், பேச்சுவார்த்தை

டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தின் நொய்டா நகரை இணைக்கும் சாலை பகுதி அமைந்த சில்லா என்ற இடத்தில் விவசாயிகள் குழு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 2 வாரங்களாக அந்த எல்லை பகுதி மூடப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து அந்த பகுதி வழியே செல்லும் வாகன போக்குவரத்து முடங்கியுள்ளது. இதற்கு தீர்வு காணப்படும் வகையில், டெல்லி துணை ஆணையர் (கிழக்கு) ஜஸ்மீத் சிங் தலைமையிலான போலீசார் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் பலன் ஏற்பட்டு உள்ளது. வாகனங்கள் செல்வதற்கு விவசாயிகள் ஒப்புதல் அளித்து உள்ளனர். இதனால், இன்றிரவுக்குள் டெல்லி-நொய்டா எல்லை திறந்து விடப்படும் என டெல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Tags :
|