Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை மயிலாப்பூரில் வியாழக்கிழமைதோறும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு

சென்னை மயிலாப்பூரில் வியாழக்கிழமைதோறும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு

By: vaithegi Sun, 27 Aug 2023 09:53:53 AM

சென்னை மயிலாப்பூரில் வியாழக்கிழமைதோறும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு

சென்னை : சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரம் சாலையில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு வாரம்தோறும் வியாழக்கிழமை அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே இதனைக் கருத்தில்கொண்டு வாரந்தோறும் வியாழக்கிழமை அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது. இதன்படி, ஆர்.கே.மடம் சாலையிலிருந்து சாலையிலிருந்து சாய்பாபா கோயில் நோக்கொ வரும் வாகனங்கள் வழக்கம்போல் வெங்கடேச அக்ரஹாரம் சாலை வழியாக செல்லலாம்.

transport change,chennai ,போக்குவரத்து மாற்றம் ,சென்னை

சாரதாபுரம் சாலை, டாக்டர் ரங்கா சாலை, கிழக்கு அபிராமபுரம் சாலை ஆகியவற்றிலிருந்து சாய்பாபா கோயில் நோக்கி வரும் வாகனங்கள் வெங்கடேச அக்ரஹாரம் சாலையில் செல்ல அனுமதி இல்லை. இந்த வாகனங்கள் வி.சி.கார்டன் 1-வது தெரு வழியாக திருப்பிவிடப்பட்டு, செயின்ட் மேரீஸ் சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படும்.

மேலும் அலமேலுமங்காபுரம், டாக்டர் நஞ்சுடா சாலை ஆகிய சாலைகளில் இருந்து வரும் வாகனங்கள், வெங்கடேச அக்ரஹாரம் சாலையிலிருந்து ஆர்.கே.மடம் சாலை செல்ல அனுமதி கிடையாது. இந்த வாகனங்கள் வெங்கடேச அக்ரஹாரம் சாலையில் ஒரு வழிபாதையாக சாரதாபுரம் சாலை நோக்கி செல்லலாம்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :