Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நெல்லை மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியீடு

நெல்லை மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியீடு

By: vaithegi Fri, 21 July 2023 4:25:37 PM

நெல்லை மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியீடு


நெல்லை .. புதிய வாய்க்கால் பாலம் கட்டும் பணியின் காரணமாக நெல்லை மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம்அறிவிப்பு ..தமிழக முக்கிய சாலைகளில் செய்யப்படும் பராமரிப்பு மற்றும் கட்டுமான பணிகளின் காரணமாக அவ்வப்போது போக்குவரத்து பாதைகளில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இதையடுத்து அந்த வகையில் தற்போது நெல்லை டவுனில் சந்திப் பிள்ளையார் கோவில், காட்சி மண்டபம் வரையிலான சாலையில் அரசரடி விநாயகர் கோவில் அருகே பழுதடைந்த வாய்க்கால் பாலம் புதிதாக கட்டுமானம் செய்யப்படவுள்ளது.

இதனால் சந்திப்பிழையார் கோவில் முதல் காட்சி மண்டபம் வரை செல்லும் இருசக்கர வாகனங்கள் இலகுரக வாகனங்கள் கோவிலிருந்து கணேஷ் தியேட்டர் தெற்கு மவுண்ட் ரோடு வழியாக காட்சி மண்டபம் செல்ல வேண்டும். கோயில் முதல் கணேஷ் தியேட்டர் வரை ஒரு வழி பாதை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

traffic change,paddy ,போக்குவரத்து மாற்றம் ,நெல்லை

மேலும் கணேஷ் தியேட்டரில் இருந்து சந்திப்பிழையார் கோவில் செல்லும் வாகனங்கள் லட்சுமி மஹால் குளப்பிறை தெரு அடி முனை வழியாக கோவிலுக்கு செல்ல வேண்டும். இம்மாற்றம் முதற்கட்டமாக சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்களில் சோதனை முறையில் செய்யப்படுகிறது.

இதையடுத்து அதன் பின் திங்கள் கிழமையிலிருந்து நிரந்தரப் படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான ஆலோசனைகள் ஏதும் இருப்பின் பொதுமக்கள் 046 – 2562651 என்ற கட்டுப்பாட்டு எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் அறிவித்து உள்ளார்.

Tags :