ஆந்திரவில் முதியோர் ஓய்வூதியம் உயர்த்தப்படும் என அறிவிப்பு
By: vaithegi Tue, 10 Oct 2023 12:40:59 PM
ஆந்திர : ஓய்வூதியம் ரூ.3000ஆக உயர்த்தப்படும் ...ஆந்திர மாநிலம், என்டிஆர் மாவட்டத்தில் உள்ள விஜயவாடா இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் ஜெகன்மோகன் கலந்து கொண்டார்.
இதையடுத்து அப்போது பேசிய அவர் 4 ஆண்டுகால ஆட்சியில் பல புரட்சிகரமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர் வருகிற ஜனவரி 1 முதல் முதியோர் ஓய்வூதியம் ரூ. 3000 ஆக உயர்த்தப்படும் என தெரிவித்தார்.
அதே போல மக்கள் மார்ச் மாதத்தில் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என தெரிவித்தார். நமது தேர்தல் அறிக்கையை ஒவ்வொரு வீடாக கொண்டு செல்வோம் என்று தெரிவித்த அவர்,
நன்மைகளை கிராமம், கிராமமாக அனைவரும் தெரிவிக்கும் பொறுப்பை நான் வைத்து இருப்பதாக தெரிவித்தார். மேலும் கிராம அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்து உள்ளார்.