முடக்க நிலை கட்டுப்பாடுகள் தளர்த்தும் அறிவிப்புகள் இன்று வெளியாகிறது
By: Nagaraj Mon, 13 July 2020 5:05:24 PM
இன்று அறிவிப்பு வெளியாகிறது... ஒன்ராறியோவில் அடுத்த கட்ட முடக்கநிலை கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான அறிவிப்பை, முதல்வர் டக் ஃபோர்ட் வெளியிடவுள்ளார்.
குயின்ஸ் பூங்காவில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ள ஊடக சந்திப்பின் போது, இந்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மூன்றாம் கட்ட தளர்வுகளின் படி, அனைத்து வணிகங்களையும் மீண்டும் திறக்க அனுமதிக்கும். மேலும், சமூகக் கூட்டங்களின் அளவு மீதான கூடுதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.
கச்சேரிகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் போன்ற பெரிய பொதுக்
கூட்டங்கள் எதிர்வரும் எதிர்காலத்திற்காக தொடர்ந்து கட்டுப்படுத்தப்படும்.
திரைப்பட
அரங்குகள், உடற்பயிற்சி நிலையங்கள், ஸ்டுடியோக்கள், சூதாட்ட விடுதிகள்,
பொழுதுபோக்கு பூங்காக்கள், உணவு விடுதியின் உள்ளே அமர்ந்து உண்ணுதல்
மற்றும் மதுபானச்சாலைகள் போன்ற வணிகங்கள் மீண்டும் திறக்கப்படலாம்.