Advertisement

திருவண்ணாமலையில் மேலும் 135 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Monisha Mon, 20 July 2020 3:45:32 PM

திருவண்ணாமலையில் மேலும் 135 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 135 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 70 ஆயிரத்து 693 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 லட்சத்து 17 ஆயிரத்து 915 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,481 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னையை தொடர்ந்து தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது.

thiruvannamalai,corona virus,infection,treatment,death ,திருவண்ணாமலை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 135 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன்மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,912 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 24 பேர் பலியாகியுள்ளனர். 1,848 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதியை சேர்ந்தவர்களுக்கு வைரஸ் பாதிப்பு உள்ளதா என்று சுகாதார துறையினர் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

Tags :