Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் கொரோனாவுக்கு மேலும் 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சென்னையில் கொரோனாவுக்கு மேலும் 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

By: Monisha Sat, 18 July 2020 12:30:58 PM

சென்னையில் கொரோனாவுக்கு மேலும் 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மேலும் 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரத்து 907 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 47 ஆயிரத்து 782 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 10 ஆயிரத்து 807 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 2,315 பேர் பலியாகியுள்ளனர்.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

chennai,corona virus,infection,treatment,death ,சென்னை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,உயிரிழப்பு

சென்னையில் 83 ஆயிரத்து 377 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு நேற்றுவரை 1,376 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று காலை நிலவரப்படி 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 8 பேர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 3 பேர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேர், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 4 பேர் என அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ளனர். தனியார் மருத்துவமனையில் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

Tags :