Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பாதித்து சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 20 பேர் பூரண குணமடைந்தனர்

கொரோனா பாதித்து சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 20 பேர் பூரண குணமடைந்தனர்

By: Nagaraj Sun, 31 May 2020 4:46:21 PM

கொரோனா பாதித்து சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 20 பேர் பூரண குணமடைந்தனர்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களில் மேலும் 20 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. உலக நாடுகளை வெகுவாக அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு இலங்கையிலும் தொடர் கதையாகிறது.

இதற்கிடையில் கொரோனா பாதித்து வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தற்போது மேலும் 20 பேர் குணமடைந்தனர். இதுவரை குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியவர்களின் மொத்த எண்ணிக்கை 801 ஆக அதிகரித்துள்ளது.

healed,reported,identified,corona ,குணமடைந்தனர், அறிக்கை, அடையாளம், கொரோனா

நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 1620 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதில் 809 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 758 பேர் கடற்படையினர் என்றும் 515 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும் சமீபத்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Tags :
|