Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Tue, 27 Oct 2020 09:08:02 AM

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 11 ஆயிரத்து 713 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அந்தவகையில் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 2 லட்சத்து 73 ஆயிரத்து 258 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16 ஆயிரத்து 175 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 14 ஆயிரத்து 920 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3 ஆயிரத்து 739 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட வில்லை. ஒரு முகாமில் 2 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 74 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

virudhunagar district,corona virus,infection,death,treatment ,விருதுநகர் மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 46 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 221 ஆக உயர்ந்துள்ளது. இம்மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக 1,280 பேருக்கு மட்டுமே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு குறைந்தாலும் மருத்துவ பரிசோதனை எண்ணிக்கையை குறைக்கக் கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் பரிசோதனைகளை அதிகரிக்கவும், முடிவுகளை தெரிவிப்பதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Tags :
|