Advertisement

நேபாளத்தில் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம்

By: vaithegi Sun, 05 Nov 2023 10:37:19 AM

நேபாளத்தில் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம்

நேபாளம் : நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு ... நேபாளத்தில் நேற்று முன்தினம் இரவு 6.4 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கத்தின் அதிர்வு டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் ஏற்பட்டதை அடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.

நேபாளத்தில் இந்நிலநடுக்கத்தின் பாதிப்பால் இதுவரை 157-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 357 பேர் காயமடைந்து உள்ளதாகவும், பல வீடுகள் மற்றும் பிற கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

earthquake,nepal ,நிலநடுக்கம் ,நேபாளம்

இதையடுத்து இந்த நிலநடுக்கம் ஏற்படுத்திய பேரழிவுவிலிருந்து நேபாளம் இன்னும் மீளாமல் இருக்கும் நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் காத்மாண்டுவிலிருந்து வடமேற்கே 169 கி.மீ ஆழத்தில் 10 கி.மீ தொலைவில் உள்ளதாகவும், ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவாகியுள்ளது என்று தேசிய மையம் தெரிவித்து உள்ளது.

நேபாள பிரதமர் புஷ்ப் கமால் தஹால் நேற்று பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சந்தித்தார். அவர் நிலைமையை ஆய்வு செய்தார். நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்து உள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்துள்ளதாகவும், தனது அரசு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளதாகவும் கூறினார்.

Tags :