Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகாராஷ்டிராவில் மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மகாராஷ்டிராவில் மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி

By: Monisha Tue, 26 May 2020 09:31:51 AM

மகாராஷ்டிராவில் மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. மாநிலத்தில் கொடிய கொரோனா அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை அங்கு 50 ஆயிரத்தை கடந்து உள்ளது. பொதுமக்கள் தவிர போலீசார், சுகாதார பணியாளர்கள், பெஸ்ட் ஊழியர்கள், மத்திய படை வீரர்கள் என பல தரப்பினரையும் கொரோனா தொற்று தாக்கி உள்ளது.

மேலும் கொரோனா தொற்று மந்திரிகளையும் விட்டுவைக்கவில்லை. கடந்த மாத இறுதியில் மகாராஷ்டிரா மாநில வீட்டு வசதித்துறை மந்திரி ஜிதேந்திர அவாத் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமாகி ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்.

india,corona virus,maharashtra,ashok chavan,political leaders ,இந்தியா,கொரோனா வைரஸ்,மகாராஷ்டிரா,அசோக் சவான்,அரசியல் தலைவர்கள்

இந்தநிலையில் தற்போது மேலும் ஒரு மந்திரி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். மாநில பொதுப்பணித்துறை மந்திரியும், முன்னாள் முதல்-மந்திரியுமான அசோக் சவான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவரான இவர் நாந்தெட் மாவட்டத்தை சேர்ந்தவர்.

இவர் பணி நிமித்தமாக மும்பை-நாந்தெட் இடையே அடிக்கடி பயணித்து உள்ளார். அதன்படி சில நாட்களுக்கு முன் மும்பை வந்துள்ளார். அதன்பிறகு நாந்தெட் திரும்பிய அவர் கொரோனா அறிகுறியுடன் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். இதையடுத்து நடந்த பரிசோதனையில் மந்திரிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது மந்திரி நாந்தெட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது அரசியல் தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|