Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க மறுவாய்ப்பு .. நாளை முதல் ஆக.20ம் தேதி வரையிலும் சிறப்பு முகாம்

உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க மறுவாய்ப்பு .. நாளை முதல் ஆக.20ம் தேதி வரையிலும் சிறப்பு முகாம்

By: vaithegi Thu, 17 Aug 2023 3:19:41 PM

உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க மறுவாய்ப்பு   .. நாளை முதல்  ஆக.20ம் தேதி வரையிலும் சிறப்பு முகாம்


சென்னை: தமிழகத்தில் மகளிருக்கான ரூ. 1000 உரிமைத் தொகை திட்டம் வருகிற செப். 15ம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், உரிமைத்தொகைக்கான விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்கான முகாம் நேற்றுடன் நிறைவடைந்திருக்கிறது.

மேலும், எந்த ஒரு தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளும் விடுபட்டு விடக்கூடாது என்பதற்காக உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கு 2 நாட்கள் முகாம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், பல குடும்பத் தலைவிகள் தற்போது வரையிலும் ரூ. 1000 உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்காத காரணத்தினால் நாளை முதல்வருகிற ஆகஸ்ட் 20ம் தேதி வரையிலும் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

entitlement,special camp,family heads ,உரிமைத்தொகை,சிறப்பு முகாம்,குடும்ப தலைவிகள்


இதனை அடுத்து, தற்போது வரையிலும் 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

மேலும், குடும்ப தலைவிகளுக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படும் பட்சத்தில் மேல்முறையீடு செய்யவும் உரிமை உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, குடும்பத் தலைவிகள் தங்களது மொபைல் எண்ணிற்கு வரும் செய்தியினை பொறுத்து விண்ணப்பம் நிராகரிக்கப்படும் பட்சத்தில் மேல்முறையீடு செய்து கொள்ளலாம்.

Tags :