Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு

By: vaithegi Thu, 27 Apr 2023 10:03:57 AM

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு

சென்னை: நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் உயர்ந்து கொண்டே வருகிறது. நூற்றுக்கணக்கில் பதிவாகி வந்த கொரோனா பரவல் கடந்த சில நாட்களாகவே 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. அதிலும் குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் நேற்று புதிதாக 542 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 432 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

death,corona ,உயிரிழப்பு ,கொரோனா

இதையடுத்து இதில் அதிகபட்சமாக சென்னையில் 116 பேருக்கு, கோவையில் 75 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 35 பேருக்கும், செங்கல்பட்டில் 31 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூரில் 28 பேருக்கும், சேலம் மற்றும் சிவகங்கையில் தலா 27 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோன்று திருவண்ணாமலையில் 26 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. திருச்சியில் 14 நபர்களுக்கும், தென்காசியில் 13 பேருக்கும், நாமக்கல்லில் 12 பேருக்கும் காஞ்சி, மயிலாடுதுறையில் தலா 11 பேருக்கும் கொரோனா ஏற்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் 10 மற்றும் 10க்கு கீழ் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

Tags :
|