Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சாட்சியங்களை மறைத்தமைக்காக மேலும் ஒரு உப பொலிஸ் பரிசோதகர் கைது

சாட்சியங்களை மறைத்தமைக்காக மேலும் ஒரு உப பொலிஸ் பரிசோதகர் கைது

By: Nagaraj Tue, 04 Aug 2020 1:36:35 PM

சாட்சியங்களை மறைத்தமைக்காக மேலும் ஒரு உப பொலிஸ் பரிசோதகர் கைது

மேலும் ஒருவர் கைது... குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் மேலும் ஒரு உப பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுடன் இணைந்து சாட்சியங்களை மறைத்தமை தொடர்பாகவே அவர் நேற்று (திங்கட்கிழமை)கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள உப பொலிஸ் பரிசோதகரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

testimonies,concealed,dismissal,arrest,former director ,
சாட்சியங்கள், மறைத்தது, பணி நீக்கம், கைது, முன்னாள் பணிப்பாளர்

கடந்த வெள்ளிக்கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்ட அவர், சுகயீனம் காரணமாக மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகின்றது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கடந்த ஜனவரி மாதம், உடன் அமுலுக்கு வரும் வகையில் பணி நீக்கப்பட்டு, காலி பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பிரத்தியேக உதவியாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|