Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • லடாக்கில் சீனா படைகளை பின்வாங்கச் செய்வதில் உண்மையாக நடந்து கொள்ளும் - அனுராக் ஸ்ரீவஸ்தவா எதிர்பார்ப்பு

லடாக்கில் சீனா படைகளை பின்வாங்கச் செய்வதில் உண்மையாக நடந்து கொள்ளும் - அனுராக் ஸ்ரீவஸ்தவா எதிர்பார்ப்பு

By: Karunakaran Fri, 24 July 2020 12:15:29 PM

லடாக்கில் சீனா படைகளை பின்வாங்கச் செய்வதில் உண்மையாக நடந்து கொள்ளும் - அனுராக் ஸ்ரீவஸ்தவா எதிர்பார்ப்பு

லடாக்கில் சீனாவின் அத்துமீறலை அடுத்து கடந்த 5-ந் தேதி, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும், சீன வெளியுறவு மந்திரி வாங் யியும் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை முடிவில் உடன்பாடு ஏற்பட்டதால், மறுநாள் 6-ந் தேதி எல்லையில் இருந்து இரு நாட்டு படைகளும் பின்வாங்கின.

இந்நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா பேட்டி அளித்தபோது, சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையின்போது, படைகளை முழுமையாக பின்வாங்கச் செய்வது என்றும், அமைதியை நிலைநிறுத்துவது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது. எல்லையில் அமைதியை கடைப்பிடிப்பதுதான், சீனாவுடனான இருதரப்பு உறவுக்கு அடிப்படை ஆகும் என்று கூறினார்.

anurag srivastava,china,ladakh border,union foreign ministry spokesperson ,அனுராக் ஸ்ரீவாஸ்தவா, சீனா, லடாக் எல்லை, மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்

லடாக்கில் இருந்து படைகளை முழுமையாக பின்வாங்கச் செய்வதில் சீனா உண்மையாக நடந்து கொள்ளும் என்று எதிர்பார்ப்பதாகவும், சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பதற்றத்தை தணிப்பதுடன், எல்லையில் அமைதியை முழுமையாக நிலைநிறுத்தும் என்று எதிர்பார்ப்பதாகவும் அனுராக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.

மேலும் அவர், எல்லைக்கோட்டை மதிக்க இந்தியா முழுமையாக உறுதி பூண்டிருப்பதாக ஏற்கனவே இந்தியா தெளிவாக தெரிவித்துள்ளது. எல்லை கோட்டில் ஏற்கனவே இருந்த நிலையை தன்னிச்சையாக மாற்றும் எந்த முயற்சியையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் கூறியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|