Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாதுகாப்பை உறுதி செய்யாத எந்த ஒரு கொரோனா தடுப்பூசியும் மிகப்பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாது - சௌமியா சுவாமிநாதன்

பாதுகாப்பை உறுதி செய்யாத எந்த ஒரு கொரோனா தடுப்பூசியும் மிகப்பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாது - சௌமியா சுவாமிநாதன்

By: Karunakaran Thu, 10 Sept 2020 2:28:22 PM

பாதுகாப்பை உறுதி செய்யாத எந்த ஒரு கொரோனா தடுப்பூசியும் மிகப்பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாது - சௌமியா சுவாமிநாதன்

கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க உலகின் பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதில் ரஷியா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசி ஒன்றை கண்டறிந்தது.

இந்த கொரோனா தடுப்பூசி பக்கவிளைவுகளை ஏற்படுத்தியதால் பரிசோதனை பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பரிசோதனைகளை இங்கிலாந்து, அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. ஆனால், ரஷியாவின் ’ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியின் இறுதிக்கட்ட பரிசோதனை இன்று தொடங்கியுள்ளது. இந்த இறுதிகட்ட பரிசோதனையில் 31 ஆயிரம் பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தி சோதனை செய்யப்பட உள்ளது.

corona vaccine,soumya swaminathan,who,corona virus ,கொரோனா தடுப்பூசி, சவுமிய சுவாமிநாதன், உலக சுகாதார அமைப்பு ,கொரோனா வைரஸ்

பல நாடுகள் பல்வேறு கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கி வரும் நிலையில் அதன் பாதுகாப்பு குறித்த அச்சம் மக்களிடம் எழுந்துள்ளது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் முதன்மை ஆராய்ச்சியாளர் சௌமியா சுவாமிநாதன், எந்த ஒரு கொரோனா தடுப்பூசியும் குறைந்த பட்ச செயல்திறன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், குறைந்த பட்ச செயல்திறன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யாத, மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு, உலக நாடுகளின் அரசுகள், உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றிற்கு நம்பிக்கை அளிக்காத எந்த ஒரு கொரோனா தடுப்பூசியும் மிகப்பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாது. எந்த ஒரு கொரோனா தடுப்பூசியின் அளவுகோள் மற்றும் தடுப்பூசியின் திறனை ஆராய நாங்கள் மிகவும் விரிவான மற்றும் முழுமையான செயல்முறையை கொண்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.

Tags :
|