Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆப்பிள் ஐபோன் பயன்படுத்த தடை விதிப்பு: யாருக்கு தெரியுங்களா

ஆப்பிள் ஐபோன் பயன்படுத்த தடை விதிப்பு: யாருக்கு தெரியுங்களா

By: Nagaraj Sun, 13 Aug 2023 6:46:31 PM

ஆப்பிள் ஐபோன் பயன்படுத்த தடை விதிப்பு: யாருக்கு தெரியுங்களா

மாஸ்கோ: உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா தாக்குதல் நடத்தியது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், ஆப்பிள் ரஷ்யாவிலிருந்து வெளியேறியது மற்றும் உக்ரைன் படையெடுப்பைத் தொடர்ந்து விற்பனையை நிறுத்தியது. இருப்பினும், ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்கள் மற்ற நாடுகளில் இருந்து ரஷ்யாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டன.

இதனிடையே, ரஷ்ய மக்கள் பயன்படுத்தும் ஆப்பிள் சாதனங்கள் மூலம் அந்நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக ரஷ்யாவின் முக்கிய உள்நாட்டு பாதுகாப்பு சேவையான FSB தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டினார். ஆப்பிள் மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் இணைந்து செயல்படுவதாக எஃப்.எஸ்.பி. குற்றம் சாட்டியிருந்தது.

apple,ban,government,iphone,officials,russia, ,அதிகாரிகள், அரசு, ஆப்பிள், ஐபோன், தடை, ரஷ்யா

இதில் ஆப்பிள் நிறுவனமும், அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமையும் இணைந்து செயல்படுவதாக எஃப்.எஸ்.பி. தெரிவித்தது. இதனையடுத்து ரஷ்ய டிஜிட்டல் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் ஒரு சுற்றறிக்கையில், “ஐபோன் மற்றும் ஐபேடு மூலமாக அமெரிக்கா, ரஷ்ய மக்களின் தகவல் தொடர்புகளை அறிந்து கொள்ளும் ஆபத்து இருக்கிறது. இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படலாம்.

எனவே ஐபோன்கள் மற்றும் ஐபேடுகளை வேலை நோக்கங்களுக்காக ரஷ்ய அரசு அதிகாரிகள் இனி பயன்படுத்தப்படக் கூடாது. பணி பயன்பாடுகளுக்கான செயலிகளை உபயோகப்படுத்தவும், வேலை சம்பந்தமான மின்னஞ்சல் பரிமாற்றத்தை செய்யவும், ஆப்பிள் நிறுவன ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளை பயன்படுத்த கூடாது.

தனிப்பட்ட தேவைகளுக்காக ஐபோன்களைப் பயன்படுத்தலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகளை ஆப்பிள் நிறுவனம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|
|