Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை கல்லூரிகளில் மே 9 முதல் விண்ணப்பம் விநியோகம்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை கல்லூரிகளில் மே 9 முதல் விண்ணப்பம் விநியோகம்

By: vaithegi Thu, 27 Apr 2023 3:04:49 PM

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை கல்லூரிகளில் மே 9 முதல் விண்ணப்பம் விநியோகம்

சென்னை: தமிழகத்தில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் வருகிற மே 1 முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை கல்லூரிகளில் மே 9 முதல் விண்ணப்பம் விநியோகம் என தகவல் வெளியாகியுள்ளது.

12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற மே 8-ம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் நிலையில், விண்ணப்ப விநியோகம் தொடர்பாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

application,government,government aided arts college ,விண்ணப்பம் ,அரசு ,அரசு உதவிபெறும் கலை கல்லூரி

எனவே மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் என தனியார் கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பின் உரிய மதிப்பெண் சான்றிதழ்களுடன், விண்ணப்பங்களை பதியேற்றம் செய்ய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 633 தனியார் கல்லூரிகள், 163 அரசு கலை கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :