அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை கல்லூரிகளில் மே 9 முதல் விண்ணப்பம் விநியோகம்
By: vaithegi Thu, 27 Apr 2023 3:04:49 PM
சென்னை: தமிழகத்தில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் வருகிற மே 1 முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை கல்லூரிகளில் மே 9 முதல் விண்ணப்பம் விநியோகம் என தகவல் வெளியாகியுள்ளது.
12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற மே 8-ம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் நிலையில், விண்ணப்ப விநியோகம் தொடர்பாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
எனவே மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் என தனியார் கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பின் உரிய மதிப்பெண் சான்றிதழ்களுடன், விண்ணப்பங்களை பதியேற்றம் செய்ய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 633 தனியார் கல்லூரிகள், 163 அரசு கலை கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.