Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 2 மில்லியன் குடும்பத்திற்கு 10 கிலோ அரிசி வழங்க அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம்

2 மில்லியன் குடும்பத்திற்கு 10 கிலோ அரிசி வழங்க அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம்

By: Nagaraj Tue, 17 Jan 2023 11:40:33 AM

2 மில்லியன் குடும்பத்திற்கு 10 கிலோ அரிசி வழங்க அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம்

கொழும்பு: அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம்... சமுர்த்தி பயனாளர்கள் உட்பட குறைந்த வருமானம் பெறும் 2 மில்லியன் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசியை 2 மாத காலத்திற்கு வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக 40,000 மெட்ரிக் டன் அரிசி தேவைப்பதோடு, அதற்கு அரசாங்கம் 61,600 மெட்ரிக் டன் நெல்லைக் கொள்வனவு செய்ய வேண்டும்.

சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களின் ஆதரவுடன் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களின் கீழ் தற்பொழுது காணப்படும் முறையை பயன்படுத்தி அடையாளம் காணப்பட்ட சமுர்த்தி பயனாளர்கள் உட்பட குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரிசி பகிர்ந்தளிக்கப்பட உள்ளதோடு பெண்கள் மற்றும் சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஊடாக இது தொடர்பில் மாவட்ட செயலாளர்களின் ஒருங்கிணைப்புடன் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட உள்ளன.

நெல் கொள்வனவுக்கு 6,200 மில்லியன் ரூபாய், நெல் உலர்த்துவதற்கு 290 மில்லியன் ரூபாய், கதிரடிக்கு வாடகைக்கு 590 மில்லியன் ரூபாய், பொதிச் செலவுக்கு 200 மில்லியன் ரூபாய், நெல் ஆலை உரிமையாளர்களுக்கு மேலதிக கொடுப்பனவாக 160 மில்லியன் ரூபாய், அரிசி போக்குவரத்துச் செலவுக்கு 600 மில்லியன் ரூபாய் என்ற வகையில் 8,040 மில்லியன் ரூபாய் இதற்காக மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், சந்தை விலைகளில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து இத்திட்டத்திற்கு மதிப்பிடப்பட்ட செலவு மாறுபடும்.தேவை ஏற்பட்டால், சுமார் 10,000 ரூபாய் வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீடு இதற்குப் பயன்படுத்தப்படும்.

கமத்தொழில் திணைக்களம் மற்றும் விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் தரவுகளின்படி, 2022/2023 பெரும்போகத்தில் நெல் பயிரிடப்பட்ட பரப்பளவு சுமார் 732,201 ஹெக்டெயராக இருந்ததோடு, மற்றும் எதிர்பார்க்கப்படும் நெல் விளைச்சல் 3.3 மில்லியன் மெ.தொன்களாகும்.

இதன் மூலம் உற்பத்தி செய்யக்கூடிய அரிசியின் அளவு சுமார் 2.2 மில்லியன் மெ.தொன்களாகும். நாட்டின் மாதாந்த அரிசித் தேவையான சுமார் 210,000 மெற்றிக் தொன்களைக் கருத்திற்கொண்டால், எதிர்வரும் பெரும்போகத்தில் அரிசி மேலதிக கையிருப்பு கிடைக்கலாம் என அவதானிக்கப்படுகின்றது. அதன்படி, நெல் விவசாயி மற்றும் நுகர்வோர் இருவரையும் பாதுகாக்கும் வகையில், 2020/23 பெரும்போகத்தில் குறிப்பிட்ட அளவு நெல் கொள்முதல் செய்வதில் அரசாங்கம் தலையிடுவது அவசியம் ஆகும்.

அரசாங்கம், அரிசி, தேவை, நுகர்வோர், விவசாயி, அவதானிக்கப்படுகிறது.

Tags :