Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வளரும் நாடுகளுக்கு உதவும் வகையில் 12 பில்லியன் டாலர் நிதியுதவிக்கு ஒப்புதல்

வளரும் நாடுகளுக்கு உதவும் வகையில் 12 பில்லியன் டாலர் நிதியுதவிக்கு ஒப்புதல்

By: Nagaraj Wed, 14 Oct 2020 9:08:53 PM

வளரும் நாடுகளுக்கு உதவும் வகையில் 12 பில்லியன் டாலர் நிதியுதவிக்கு ஒப்புதல்

உலக வங்கி ஒப்புதல்... 1 பில்லியன் மக்கள் வரை தடுப்பூசி போடுவதை ஆதரிக்கும் நோக்கில், வளரும் நாடுகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசிகள், சோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்கு உதவும் வகையில் 12 பில்லியன் டாலர் நிதியுதவிக்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா தொற்றுநோயை எதிர்த்து வளரும் நாடுகளுக்கு உதவுவதற்காக திட்டமிடப்பட்டுள்ள 12 பில்லியன் டாலர் நிதி என்பது 160 பில்லியன் டாலர் வரை பரந்த உலக வங்கி குழு தொகுப்பின் ஒரு பகுதியாகும் என்று வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலக வங்கி தனது கொரோனா அவசரகால பதில் திட்டங்கள் ஏற்கனவே 111 நாடுகளை எட்டியுள்ளன என மேலும் தெரிவித்துள்ளது. வளரும் நாடுகளில் உள்ள குடிமக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதை நோக்கமாக கொண்டு இந்த நிதி உதவிகள் வழங்கப்படுவதாக உலக வாங்கி தெரிவித்துள்ளது.

billion dollars,funding,world bank,corona,approval ,பில்லியன் டாலர், நிதியுதவி, உலக வங்கி, கொரோனா, ஒப்புதல்

“கொரோனா அவசரநிலைக்கு தீர்வு காண எங்கள் விரைவான பாதையை நாங்கள் விரிவுபடுத்தி வருகிறோம். இதனால் வளரும் நாடுகளுக்கு தடுப்பூசிகளுக்கு நியாயமான மற்றும் சமமான அணுகல் உள்ளது” என்று வங்கியின் தலைவர் டேவிட் மால்பாஸ் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் தெரிவித்தார்.

“பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகள் மற்றும் வலுப்படுத்தப்பட்ட விநியோக முறைகளுக்கான அணுகல் தொற்றுநோயின் போக்கை மாற்றுவதற்கும், பேரழிவு தரக்கூடிய பொருளாதார மற்றும் நிதி தாக்கங்களை அனுபவிக்கும் நாடுகளுக்கு மீளக்கூடிய மீட்சியை நோக்கிச் செல்வதற்கும் முக்கியமானது” என்று அவர் மேலும் கூறினார்.

உலக வங்கியின் தனியார் துறை கடன் வழங்கும் நிறுவனமான சர்வதேச நிதிக் கழகம் தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு 4 பில்லியன் டாலர் உலகளாவிய சுகாதார தளம் மூலம் முதலீடு செய்து வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

Tags :
|