Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருச்சி மாவட்டத்தில் ஏப்.18 & 19 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருச்சி மாவட்டத்தில் ஏப்.18 & 19 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

By: vaithegi Tue, 04 Apr 2023 12:38:40 PM

திருச்சி மாவட்டத்தில் ஏப்.18 & 19 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை .... தமிழகம் முழுவதும் அல்லாமல், குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் சிறப்பிக்கப்படும் திருவிழா மற்றும் பண்டிகைகளுக்கு மாவட்ட ஆட்சியர் சிறப்பு அதிகாரம் மூலம் உள்ளூர் விடுமுறை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் சித்திரை தேர்த்திருவிழா வரும் 9-ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் முறையே ஏப்ரல் 18 மற்றும் 19-ம் தேதிகளில் நடைபெறருயிக்கிறது.

school,college,vacation ,பள்ளி, கல்லூரி,விடுமுறை

இவ்விழாவிற்கு தமிழகம் முழுவதிலுமிருந்து அதிக அளவிலான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனால் வருகிற ஏப்ரல் 18 மற்றும் 19-ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அன்றைய தினங்களில் பொதுத்தேர்வு நடக்கும் பள்ளிகளுக்கு மற்றும் தேர்வு நடக்கும் கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களை ஈடுசெய்யும் விதமாக ஏப்ரல் 29 மற்றும் மே 13-ம் தேதி வேலை நாளாக செயல்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|