Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஏப்ரல் 5ஆம் தேதி இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

ஏப்ரல் 5ஆம் தேதி இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

By: vaithegi Sat, 25 Mar 2023 10:14:18 AM

ஏப்ரல் 5ஆம் தேதி இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தென்காசி : தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற திரு விழாவாக பொதுமக்களால் கொண்டாடப்பட்டு வரும் பங்குனி உத்திர திருநாள் இந்தாண்டு வருகிற 5-ம் தேதி அன்று கொண்டாடப்பட உள்ளது. எனவே இதை முன்னிட்டு தென்காசி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லுாரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இதனை அடுத்து அன்றைய நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது.

local vacationers,couples ,உள்ளூர் விடுமுறை,மாணவர்கள்


எனவே உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எந்த வித மாறுதலுமின்றி நடைபெறும். மேற்படி உள்ளூர் விடு முறையானது செலவாணி முறிச்சட்டம் 1881 - கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலே குறிப்பிடப் பட்டுள்ள உள்ளூர் விடு முறையை ஈடு செய்யும் வகையில் 6.5.2023 முதலாவது சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. அந்த சமயம் கோடை விடுமுறையில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு இந்த வேலைநாள் பெருந்தாது” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :