உக்ரைனில் போரை நிறுத்துமாறு பேராயர் மற்றும் போப் பிரான்சிஸ் வேண்டுகோள்
By: Nagaraj Mon, 26 Dec 2022 09:30:16 AM
வாடிகன்: கேன்டர்பரி பேராயர் மற்றும் போப் பிரான்சிஸ் ஆகியோர் உக்ரைனில் போரை நிறுத்துமாறு வலியுறுத்தி உள்ளனர்.
நத்தார் பண்டிகையை ஒட்டி மேற்கொள்ளப்பட்ட பிரசங்க உரையின்போதே அவர்கள் மேற்படி அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்நிலையில் போர் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் பஞ்சத்தை எதிர்கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர்.
10 மாதகால யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவுகளால் வீடுகளை விட்டு வெகு தொலைவில் இருளிலும், குளிரிலும், இந்த கிறிஸ்துமஸை அனுபவிக்கும் உக்ரேனிய சகோதர, சகோதரிகளின் முகங்களையும் பார்ப்போம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
Tags :
ukraine |
war |
call |