- வீடு›
- செய்திகள்›
- இந்தியாவுக்கு சுற்றுலா போறீங்களா... தங்கள் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா
இந்தியாவுக்கு சுற்றுலா போறீங்களா... தங்கள் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா
By: Nagaraj Fri, 07 Oct 2022 10:00:26 PM
வாஷிங்டன்: சுற்றுலா மற்றும் வணிகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவிற்கு வருகை தரும் தனது குடிமக்களுக்கு அமெரிக்க உள்துறை அமைச்சகம் ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த அறிவிப்பு வெளியாகும் நிலையில், இந்த ஆண்டுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
2-வது கட்டமாக பட்டியலிடப்பட்டுள்ள இந்தியாவில், பயங்கரவாதம் மற்றும் குற்றச்செயல்கள் காரணமாக இந்தியாவிற்கு பயணம் செய்யும் அமெரிக்கர்கள் நாட்டவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பயங்கரவாதம் மற்றும் அமைதியின்மை காரணமாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம்.
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஆயுத மோதல் இருப்பதால் 10
கிலோமீட்டர்களுக்குள் செல்ல வேண்டாம். இந்தியாவில் பாலியல் வன்கொடுமை
குற்றங்கள் அதிகரித்து வருவதாக இந்திய அரசின் அறிக்கை தெரிவிக்கிறது.
பாலியல் வன்கொடுமைகள் போன்ற மோசமான வன்முறை சம்பவங்கள் சுற்றுலா
தலங்களிலும் பிற இடங்களிலும் பதிவாகியுள்ளன.
கடந்த
ஆண்டும் அமெரிக்கா இந்தியாவுக்கு வரும் தங்கள் நாட்டு மக்களுக்கு இதுபோன்ற
அறிவுரைகளை வழங்கியது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பில், கொரோனா
பரவல், பயங்கரவாதம் மற்றும் குற்றச்செயல்கள் காரணமாக, இந்தியா செல்லும்
அமெரிக்கர்கள் நாட்டவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பது
குறிப்பிடத்தக்கது.