Advertisement

நாளை மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகள்

By: vaithegi Sun, 18 Sept 2022 3:58:25 PM

நாளை மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகள்

சென்னை : தமிழகத்தில் மின்வாரியத்தில் ஏற்படும் பழுதுகளை சரி செய்யவும், முறையாக இயந்திரங்கள் மற்றும் மின்பாதைகளை பராமரிக்கவும் மாதம் தோறும் 1 முறை மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் செய்யப்படுகிறது.

இதை அடுத்து அந்த வகையில் செப்டம்பர் 19ம் தேதியான நாளை திங்கட்கிழமை காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட லப்பாளையம், பழையகோட்டை, காடையூா் ஆகிய துணை மின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் வெ.கணேஷ் அறிவித்துள்ளார்.

power outage,power board ,மின்தடை ,மின்வாரியம்

எனவே அதன்படி, லப்பாளையம் துணை மின் நிலையத்தின் லப்பாளையம், கண்ணபுரம், பா.பச்சாபாளையம், மருதுறை, முள்ளிப்புரம், செட்டிபாளையம், பகவதிபாளையம், காங்கேயம்பாளையம், முருகன்காட்டு வலசு,பழையகோட்டை துணை மின் நிலையத்தின் பழையகோட்டை, நத்தக்காடையூா், குட்டப்பாளையம், வீரசோழபுரம், வீரணம்பாளையம், குமாரபாளையம், சகாயபுரம் ஆகிய பகுதிகளிலும்

மேலும் சேனாதிபதிபாளையம், கொல்லன்வலசு, வடபழனி, கண்ணம்மாபுரம் மற்றும் காடையூா் துணை மின் நிலையத்தின் காடையூா், கவுண்டம்பாளையம், பசுவமூப்பன்வலசு, சடையபாளையம், சம்மந்தம்பாளையம், மேட்டுப்பாறை, பொன்னங்காளிவலசு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :