Advertisement

நாளை மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகள்

By: vaithegi Wed, 12 Oct 2022 2:26:54 PM

நாளை மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகள்

நாமக்கல் : மின்தடை .. நாளை நாமக்கல் பகுதிக்கு உட்பட்ட எருமப்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.

இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை எருமப்பட்டி துணை மின் நிலையத்தில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் ரத்து செய்யப்படும் என நாமக்கல் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் அவர்கள் அறிவித்துள்ளார்.

அதனால் கீழ்க்கண்ட பகுதியில் இருக்கும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

power block,namakkal ,மின்தடை ,நாமக்கல்

இதனை தொடர்ந்து எருமப்பட்டி துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான, கஸ்தூரிப்பட்டி, அலங்காநத்தம், தோட்டமுடையாம்பட்டி, எருமப்பட்டி, வரகூா், பொட்டிரெட்டிப்பட்டி, தேவராயபுரம், நவலடிப்பட்டி, பவித்திரம், வரதராஜபுரம், முட்டான்செட்டி ஆகிய பகுதிகளிலும்

மேலும் சிங்களகோம்பை, பவித்திரம்புதூா், காவக்காரப்பட்டி, செல்லிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய செயற் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

Tags :