Advertisement

நாளை மின்சாரம் தடை செய்யப்படவுள்ள பகுதிகள்

By: vaithegi Tue, 14 Mar 2023 1:55:49 PM

நாளை மின்சாரம் தடை செய்யப்படவுள்ள பகுதிகள்

சென்னை: தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில் மின் பயன்பாடு வெகுவாக உயர்ந்துள்ளது. வரும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் மின் தேவையானது இன்னும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடையில்லா மின்சாரத்தை வழங்கும் நோக்கில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது.

எனவே அதன் ஒரு பகுதியாக மாவட்ட துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த பணிகளின் காரணமாக மின் விநியோகம் சிறிது நேரம் தடை செய்யப்பட்டு வருகிறது.

electricity,power supply ,மின்சாரம் ,மின் விநியோகம்

இதனை அடுத்து இது குறித்து மின் வாரியம் சார்பில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மின் பராமரிப்பு பணி நடைபெறவுள்ள துணை மின் நிலையம் அதனால் மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை மின் விநோயோகம் தடை செய்யப்படவுள்ள பகுதிகள் பின்வருமாறு.

மல்லாங்கிணறு: மல்லாங்கிணறு, வலையங்குளம், நந்திக்காடு, நாகம்பட்டி, மேலத்துலுப்ளாங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், விருதுநகர் உள்புறம் : பாண்டியன் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின் விநியோகம் தடை செய்யப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :