Advertisement

நாளை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ள பகுதிகள்

By: vaithegi Fri, 03 Mar 2023 2:13:34 PM

நாளை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ள பகுதிகள்

சென்னை: தமிழகத்தில் அவ்வப்போது துணை மின் நிலையங்களில் ஏற்படும் பழுது காரணமாக மின் விநியோகம் தடைபடுகிறது. மேலும் எதிர்பாராத நேரங்களில் தீ விபத்து மற்றும் பிற மின் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது.

எனவே இதனை தடுக்கும் நோக்கில் மின்வாரிய ஊழியர்கள் மூலமாக ஒவ்வொரு மாதமும் அனைத்து துணை மின் நிலையங்களிலும் தவறாது மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையடுத்து அதன் காரணமாக குறிப்பிட்ட நேரம் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. மற்ற துணை மின் நிலையங்களை தொடர்ந்து நாளை தமிழகத்தில் தருமபுரி, ஈரோடு மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அதனால் கீழ் காணும் பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

power supply interruption,maintenance works , மின் விநியோகம் தடை,பராமரிப்பு பணிகள்

அந்தவகையில் தர்மபுரி: காளிப்பேட்டை, இலக்கியம்பட்டி, புதுப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

ஈரோடு: ஈரோடு டவுன், சூரம்பட்டி நல்லரோடு, எஸ்.கே.சி.ரோடு, ஜெகநாதபுரம் காலனி, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வீரப்பன்சத்திரம், இடையன்காட்டுவலசு, முனிசிபல் காலனி, ஆசிரியர் காலனி, பெருந்துறைரோடு, சம்பத்நகர், வெட்டுக்காட்டுவலசு ஆகிய பகுதிகளில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்.

Tags :