Advertisement

நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

By: vaithegi Fri, 30 Sept 2022 4:15:46 PM

நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

சென்னை: தமிழகத்தில் மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக மின்சாரம் மாறிவிட்டது. ஒரு நாள் மின்சாரம் இல்லை என்றாலும் பல வேலைகள் தடைபட்டு விடும். அந்த அளவிற்கு மிக முக்கியமான ஒன்றாக மின்சாரம் இருக்கிறது.

இதையடுத்து இந்த நிலையில் அரசு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்பதால் மாதந்தோறும் மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யும் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

electricity,chennai ,மின்சாரம் ,சென்னை

அதன்படி நாளை (அக் 1) ராஜபாளையம் கோட்டத்தில் தொட்டியபட்டி துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள தொட்டியபட்டி உப மின் நிலையத்தில் மின்சாரம் செல்லும் தொட்டியபட்டி, புதுப்பட்டி, முத்துலிங்கபுரம் ஆகிய பகுதிகளிலும்

மேலும் கோதை நாச்சியார் புரம், கொத்தங்குளம், அழகாபுரி, இ.எஸ்.ஐ. காலனி, வேட்டை பெருமாள் கோவில், கலங்கா பேரி, கலங்காபேரிபுதூர், ராஜீவ் காந்தி நகர், விஷ்ணு நகர், வேப்பங்குளம், மொட்ட மலை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை என மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு அவர்கள் தெரிவித்துள்ளார்.


Tags :