Advertisement

நாளை பவர் கட் செய்யப்படும் பகுதிகள்

By: vaithegi Thu, 13 Oct 2022 2:42:24 PM

நாளை பவர் கட் செய்யப்படும் பகுதிகள்

விருதுநகர் : பவர் கட் ... விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள நல்லமநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஆதலால் பொதுமக்கள் நாளை இந்நேரத்தில் தங்களுக்கு ஏதேனும் மின் தேவை இருப்பின் அதற்கான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாளை மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ள பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

power cut,virudhunagar , பவர் கட் ,விருதுநகர்

இதனை தொடர்ந்து, நல்லமநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான, நல்லமநாயக்கன்பட்டி, சோழபுரம், வாழவந்தாள்புரம், தெற்கு வெங்காநல்லூர், இளந்திரை கொண்டான், ஜமீன் கொல்லங்கொண்டான், சங்கரலிங்கபுரம், தேசிகாபுரம்,காமாட்சிபுரம்,

மேலும் கிழவிகுளம்,செந்தட்டியாபுரம், பட்டியூர், முதுகுடி, அயன் கொல்லங்கொண்டான், நக்கநேரி உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :