Advertisement

வரும் 17ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்

By: vaithegi Thu, 15 Sept 2022 4:01:47 PM

வரும் 17ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்

தென்காசி : தமிழகத்தில் தற்போது மின் வாரியத்தை டிஜிட்டல் மையமாகும் நோக்கில் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு மத்தியில் எப்போதும் நடந்து வரும் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் வழக்கமாக நடந்து வருகிறது.

இதையடுத்து இப்பணியின் போது துணை மின் நிலையங்கள் மற்றும் தெருக்களில் உள்ள மின் கம்பங்களிலும் மின் இணைப்புகளை சரி பார்த்தல், மின் கம்பிகளை மாற்றுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து செப்டம்பர் 17ம் தேதி தென்காசி மாவட்டத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

power outage,tenkasi ,மின்தடை ,தென்காசி

அம்மாவட்டத்தில் மலையன்குளம், கலிங்கப்பட்டி, திருவேங்கடம், நக்கல முத்தன்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. அதனால் மலையான்குளம், சிதம்பராபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூர்,

இதனை அடுத்து குருக்கள்பட்டி, கலிங்கப்பட்டி, திருவேங்கடம், சத்திரப்பட்டி, உமையத்தலைவன்பட்டி, ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, சுப்புலாபுரம், சென்னிகுளம், பாறைப்பட்டி, பருவக்குடி, கரிசல்குளம், ரெங்க சமுத்திரம், மகாதேவர் பட்டி, கரிசல்குளம், குறிஞ்சாகுளம், சங்குப்பட்டி, புதுப்பட்டி, ஆவுடையார்புரம், நக்கலமுத்தன்பட்டி, இளையரசனேந்தல், கொம்பன்குளம் ஆகிய பகுதிகளும்

மேலும் வெங்கடாசலபுரம், புளியங்குளம், அய்யனேரி, அப்பனேரி, ஆண்டிப்பட்டி, மைப்பாறை ஆகிய பகுதிகளில் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Tags :