Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆயுதபூஜைக்கே தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும்; தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை

ஆயுதபூஜைக்கே தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும்; தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை

By: Monisha Tue, 20 Oct 2020 2:09:59 PM

ஆயுதபூஜைக்கே தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும்; தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை

தமிழக முதல்வரை சந்தித்த தியேட்டர் உரிமையாளர்கள் ஆயுதபூஜைக்கே தியேட்டர்களை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் கடந்த 12-ந் தேதி காலமானார். அவரது மறைவையொட்டி பல்வேறு தலைவர்கள் முதல்வரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அபிராமி ராமநாதன், ரோகிணி பன்னீர்செல்வம் தலைமையில் தியேட்டர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் இன்று சந்தித்து அவரது தாயாரின் மறைவுக்கு ஆறுதல் கூறினர்.

இந்த சந்திப்பின்போது, ஆயுதபூஜைக்கே (அக்டோபர் 25 வரும் ஞாயிற்றுக்கிழமை) தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என முதலமைச்சரிடம் தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை கடிதத்தை கொடுத்துள்ளனர்.

Tags :