Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போதைப் பொருட்கள் கடத்தல் குறித்து இராணுவ தளபதி எச்சரிக்கை

போதைப் பொருட்கள் கடத்தல் குறித்து இராணுவ தளபதி எச்சரிக்கை

By: Nagaraj Sat, 12 Sept 2020 10:03:11 AM

போதைப் பொருட்கள் கடத்தல் குறித்து இராணுவ தளபதி எச்சரிக்கை

போதைப் பொருட்கள் கடத்தல் தொடர்பாக இராணுவ தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இராணுவத்திலுள்ள சிலர் போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படக் கூடிய அதிகபட்ச தண்டனை நிச்சயம் வழங்கப்படுமென இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

warning,drugs,action,army commander ,எச்சரிக்கை, போதைப்பொருள், நடவடிக்கை, இராணுவ தளபதி

இராணுவத்திலிருப்பவர்கள் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்து பணியாற்றுபவர்களல்ல. இலங்கை பிரஜைகளே இராணுவத்திலும் உள்ளனர்.

இராணுவ சீருடை அணிந்தாலும் அவர்களும் சமூகத்திலுள்ளவர்களே. இந்நிலையில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றவர்கள் அவர்களது செயற்பாடுகளில் இராணுவத்தினரையும் இணைத்துக் கொள்ளும் செயற்பாடுகள் ஆரம்பகாலம் முதல் முன்னெடுக்கப்படுகின்றன.

தற்போதும் நாட்டில் இவ்வாறானதொரு நிலைமை காணப்படுகிறது. எவ்வாறிருப்பினும் இராணுவத்தில் போதைப்பொருளுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டாது. அதற்கான வாய்ப்பை நாம் உருவாக்க இடமளிக்கப் போவதில்லை.

Tags :
|
|