டெல்லி மக்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்ய ஏற்பாடு; மத்திய அமைச்சர் தகவல்
By: Nagaraj Tue, 16 June 2020 7:00:48 PM
டெல்லி மக்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்வதற்கான ஏற்பாடு செய்யப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி ஆராய தமது அலுவலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை அமித் ஷா நடத்தினார். அப்போது இதைத் தெரிவித்த அவர், அடுத்த சில நாட்களில் தினசரி சோதனை எண்ணிக்கை 18,000 நெருங்கும் என கூறினார்.
வைரஸ் தொற்று கட்டுப்பாடு மற்றும் சிகிச்சையில் டெல்லி அரசின் தோல்வி
குறித்து உச்சநீதிமன்றம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள நிலையில்,
பிரச்சனையை சமாளிக்க அமித் ஷா நேரடியாக தலையிட்டுள்ளார். ஆலோசனைக்
கூட்டத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி உள்ளிட்ட
கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கொரோனா பாதித்தவர்களின்
குடும்பங்களுக்கு தலா 10,000 ரூபாய் நிதியுதவி வழங்குமாறு காங்கிரஸ்
தரப்பில் வலியுறுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.