Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதல் சிறப்பு ரயில்களுக்கு ஏற்பாடு

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதல் சிறப்பு ரயில்களுக்கு ஏற்பாடு

By: vaithegi Fri, 06 Oct 2023 2:48:39 PM

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதல் சிறப்பு ரயில்களுக்கு ஏற்பாடு

சென்னை: பண்டிகை தினத்தை முன்னிட்டு கூடுதல் சிறப்பு ரயில்கள் ... இந்தியாவில் பொதுவாக பண்டிகை தினம் மற்றும் வார இறுதி நாட்களில் பயணிகளுக்காக கூடுதல் ரயில் வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகிறது.இதையடுத்து அந்த வகையில் தற்போது ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை காரணமாக கூடுதல் ரயில் சேவை ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை நவம்பர் மாத இறுதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.

முதலாவதாக, தெலுங்கானா மாநிலத்தில் உள்ள காச்சிகுடாவிலிருந்து மதுரைக்கு இரவு 8:45 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் வருகிற அக்.16, 23, 20 மற்றும் நவ.6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் கூடுதலாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

special train,ayudha puja and diwali festival ,சிறப்பு ரயில்,ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை


இதற்கு அடுத்ததாக, செகந்திராபாத்திலிருந்து ராமநாதபுரத்திற்கு இரவு 9:10 மணிக்கு புறப்படும் ரயில் அக்.11, 18, 25, நவ.1, 8, 15, 22, 29 மற்றும் டிச.1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

அதே போல, ஆமதாபாத்த்தில் இருந்து திருச்சிக்கு காலை 9:30 மணிக்கு புறப்படும் வாராந்திர ரயில் அக்.12, 19, 26, நவ. 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளிலும், திருச்சியிலிருந்து அகமதாபாத்திற்கு காலை 5:40 மணிக்கு புறப்படும் வாரந்திர ரயில் வருகிற அக். 8, 15, 22, 29ம் நவ.5, 12, 19, 26, டிச.3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு டிக்கெட்களை இன்று முதல் புக் செய்யலாம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.

Tags :