Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரெஸ்ட் செய்யுங்கள் அம்மாவை... புகார் கொடுக்க வந்த சிறுவன்

அரெஸ்ட் செய்யுங்கள் அம்மாவை... புகார் கொடுக்க வந்த சிறுவன்

By: Nagaraj Wed, 19 Oct 2022 12:11:20 PM

அரெஸ்ட் செய்யுங்கள் அம்மாவை... புகார் கொடுக்க வந்த சிறுவன்

மத்திய பிரதேசம்: மத்தியப்பிரதேசம், புர்ஹான்பூரைச் சேர்ந்த 3வயது சிறுவன் தனது தாயிடம் சாக்லெட் கேட்டு அடம் பிடித்துள்ளான். ஆனால், அவர் சாக்லேட்டுகளை ஒளித்து வைத்துக் கொண்டு தர மறுத்துள்ளார்.

இதனால் கோவமடைந்த சிறுவன் தாய் சாக்லேட்டுகளைத் திருடி ஒளித்து வைத்துள்ளதாகவும், அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்று தந்தையிடம் பிடிவாதமாக அடம் பிடித்துள்ளார். காவல் நிலையம் அழைத்துச் செல்லவும் வற்புறுத்தியுள்ளான்.

வேறு வழியின்றி சிறுவனை சமாதானப்படுத்த காவல்நிலையம் அழைத்துச் சென்றுள்ளார் தந்தை. அங்கு, காவல் நிலைய துணை ஆய்வாளர் பிரியங்கா நாயக்கிடம் நடந்தவற்றை சிறுவனின் தந்தை கூறியுள்ளார்.

boy,complaint against mother,chocolate,arrest,internet,viral ,சிறுவன், தாய் மீது புகார், சாக்லேட், கைது செய்யுங்கள், இணையம், வைரல்

அதனைத் தொடர்ந்து, சிறுவனிடம் புகார் பெறுவது போல காவல் துணை ஆணையர் புகாரைப் பெற்றுள்ளார்.

குழந்தைகள் பொதுவாக போலீஸாரைக் கண்டுப் பயப்படும் போது காவல் நிலையம் சென்றால் தான் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற சிந்தனை 3 வயது சிறுவனுக்கு வந்ததைச் சுட்டிக்காட்டிய பிரியங்கா, சிறுவனின் செயலுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.

பின்னர் சிறுவனிடம் புகார் எழுதி வாங்குவது போல் செய்து தந்தையுடன் காவல் துணை ஆய்வாளர் பிரியங்கா நாயக் அனுப்பி வைத்தார். இது தொடர்பான காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
|
|