- வீடு›
- செய்திகள்›
- கலைஞர் மகளிர் உரிமைத்தொகை இன்னும் 2 நாட்களில் வழங்கப்பட இருக்கிறது எதிர்பார்ப்பில் பெண்கள்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை இன்னும் 2 நாட்களில் வழங்கப்பட இருக்கிறது எதிர்பார்ப்பில் பெண்கள்
By: vaithegi Wed, 13 Sept 2023 2:26:01 PM
சென்னை: தமிழகத்தில் மக்கள் பலர் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். இதனை அடுத்து இந்த திட்டம் இன்னும் 2 நாட்களில் அதாவது செப். 15 ஆம் தேதி முதல் தொடங்கப்படயிருக்கிறது.
அரசு இந்த திட்டத்திற்கான இறுதிக்கட்ட பணிகளை முடித்து பட்டியல் தயார் செய்து உள்ளது. அதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 1000 தொகை வழங்கப்பட இருக்கிறது.
இதையடுத்து இந்த திட்டம் மூலம் 1 கோடியே 6 லட்சம் பெண்கள் பயனடைய இருப்பதாக அரசு தரப்பில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இன்னும் 2 நாளில் யாருக்கெல்லாம் பணம் வரும் என்பதை தெரிந்துக் கொள்ள மக்கள் பெரும் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.