Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கூடுதலான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமோ?

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கூடுதலான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமோ?

By: vaithegi Tue, 04 Apr 2023 12:48:06 PM

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கூடுதலான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமோ?

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த மாதத்தை விட இம்மாதம் அதிகமாக பதிவாகி கொண்டு வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது சுகாதாரத்துறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனவே அதன்படி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இன்று முதல் திரையரங்குகள் மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட அரங்குகள் ஆகிய இடங்களில் பொதுமக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

restrictions,corona,mask ,கட்டுப்பாடுகள் ,கொரோனா ,முகக்கவசம்

இதனால் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் பொதுமக்கள் மத்தியில் கூடுதலான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? என்ற அச்சம் நிலவிகொண்டு வருகிறது.

மேலும் கொரோனா பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் பட்சத்தில், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அரசு ஆலோசனை மேற்கொள்ளும்.

அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுவதற்கு கூடுதலான கட்டுப்பாடுகள் அமல்படுத்த வேண்டுமா? என முடிவு செய்து, அரசு அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|