Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிப்பு

By: vaithegi Wed, 26 Oct 2022 10:41:18 AM

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிப்பு

மேட்டூர்: அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிப்பு .... கர்நாடக மற்றும் கேரள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. மேலும் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்தது.

இதனால் ஒகேனக்கல்லில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை அடுத்து தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு இல்லாததால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

mettur dam,water level ,மேட்டூர் அணை,நீர்மட்டம்

காவிரி நுழைவிடமான தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் 35 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 20 ஆயிரம் கன அடியாக குறைந்தது. நீர்வரத்து சீரானதால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் இன்று முதல் அனுமதி அளித்துள்ளது

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 9.30 மணி அளவில் 30 ஆயிரம் கன அடியாக சரிந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

மேலும் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதில் நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 21 ஆயிரத்து 500 கன அடியும், 16 கண் மதகுகள் வழியாக விநாடிக்கு 8 ஆயிரத்து 500 கன அடியும் கால்வாயில் விநாடிக்கு 200 கன அடி வீதம் என மொத்தம் 30 ஆயிரத்து 200 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது.

Tags :