Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று விடுமுறை நாள் என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது

இன்று விடுமுறை நாள் என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது

By: vaithegi Sat, 30 July 2022 12:53:30 PM

இன்று விடுமுறை நாள் என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் மிக நன்றாக உள்ளது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி போன்ற அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

கடந்த 27-ந்தேதி மாலை திடீரென பெய்த கனமழையால் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 2 பெண்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் மறுநாள் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்ட நிலையில் நேற்று மழை ஓய்ந்து அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் விழுந்தது.

courtalam,tourists ,குற்றாலம் ,சுற்றுலா பயணிகள்

இதையடுத்து அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இன்று விடுமுறை நாள் என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காலையிலேயே அலைமோதிய வண்ணம் இருந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

மேலும் அனைத்து அருவிகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் அங்கு தேவையான போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Tags :