Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காங்கிரஸ் தலைவர் போட்டியிலிருந்து விலகுகிறேன்... அசோக் கெலாட் அறிவிப்பு

காங்கிரஸ் தலைவர் போட்டியிலிருந்து விலகுகிறேன்... அசோக் கெலாட் அறிவிப்பு

By: Nagaraj Thu, 29 Sept 2022 9:03:07 PM

காங்கிரஸ் தலைவர் போட்டியிலிருந்து விலகுகிறேன்... அசோக் கெலாட் அறிவிப்பு

டில்லி: போட்டியிலிருந்து விலகுகிறேன்... ராஜஸ்தானில் அரசியல் குழப்பம் நீடித்து வருவதால் காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து அசோக் கெலாட் விலகுவதாக அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்வு செய்ய வருகிற அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியில் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க உள்ளார். தாங்கள் தலைவராகப் போவதில்லை என சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் உறுதியுடன் இருக்கின்றனர்.

இதனால் காங்கிரஸ் தலைவர் போட்டிக்கு அசோக் கெலாட், சசி தரூர் ஆகிய இருவரும் போட்டியிடுவது உறுதியாகி இருந்தது. தேர்தலில் போட்டியிடுவதாக அசோக் கெலாட் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்.

Tags :
|
|