புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கான சட்டமன்ற தொகுதிகள் வெளியாகியது!
By: Monisha Thu, 22 Oct 2020 2:17:37 PM
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான சட்டமன்ற தொகுதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 சட்டப்பேரவை தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. அவை சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவை தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. அவை ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவை தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. அவை வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர்.
வேலூர் மாவட்டத்தில் 5 சட்டப்பேரவை தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. அவை காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், கீழவைத்தியனாங்குப்பம் ஆகிய 5 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 சட்டப்பேரவை தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. அவை அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய 4 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் 7 சட்டப்பேரவை தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. அவை செஞ்சி, மைலம், திண்டிவனம், வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 சட்டப்பேரவை தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. அவை உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி.
நெல்லை மாவட்டத்தில் 5 சட்டப்பேரவை தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. அவை நெல்லை, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம்.
தென்காசி மாவட்டத்தில் 5 சட்டப்பேரவை தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. அவை சங்கரன்கோவில்(தனி), வாசுதேவநல்லூர்(தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம்.