திபெத்தில் அதிகாலை 4,01 மணியளவில் நிலநடுக்கம்……..
By: vaithegi Mon, 13 June 2022 12:41:22 PM
திபெத்தில் இன்று அதிகாலை 4,01 மணியளவில் 4,2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக திபெத் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தேசிய நில அதிர்வு மையத்தின் கூற்றுப்படி, திபெத்தின் ஜிசாங்யில் திங்கள்கிழமை 4,2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 35,06 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 83.86 டிகிரி கிழக்கு தீர்க்கதேகையிலும்,149 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒரு சிலர் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாகவும் இதனை அடுத்து அச்சம் காரணமாக வீட்டை விட்டு வெளியே வந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலநடுக்கதால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
Tags :