- வீடு›
- செய்திகள்›
- மக்களை காக்க கனகபுராயில் மக்களின் விருப்பப்படி சுய ஊரடங்கு முடிவை எடுத்துள்ளோம் - டி.கே.சிவக்குமார்
மக்களை காக்க கனகபுராயில் மக்களின் விருப்பப்படி சுய ஊரடங்கு முடிவை எடுத்துள்ளோம் - டி.கே.சிவக்குமார்
By: Karunakaran Tue, 23 June 2020 1:05:10 PM
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கனகபுரா தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் டி.கே.சிவக்குமார் தனது தொகுதி உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்து கொரோனா குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அதன்பின், கனகபுராவில் சுய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனகபுராவில் சுய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது குறித்து துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறுகையில், ஊரடங்கு குறித்து முடிவு எடுக்க டி.கே.சிவக்குமாருக்கு அதிகாரம் இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் பெங்களூருவில் நேற்று பேட்டி அளித்தபோது கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பதிலளித்துள்ளார்.
பெங்களூருவில் நேற்று அவர் பேட்டி அளித்தபோது, கனகபுரா எனது தொகுதி. அங்கு நான் எம்.எல்.ஏ.வாக இருக்கிறேன். மக்களின் நலன் கருதி, கொரோனாவிடம் இருந்து மக்களை காக்க அங்கு மக்களின் விருப்பப்படி சுய ஊரடங்கு முடிவை எடுத்துள்ளோம். இது எனது கடமை. அதை செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பெரிய மனிதர். அவரை பற்றி நான் பேச விரும்பவில்லை என்றும், பெங்களூருவில் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து முடிவு எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. அவர்கள் எந்த முடிவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும் என்றும் கூறினார்.