Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிரியா மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய வான்வெளி தாக்குதலில்10 பேர் உயிரிழப்பு

சிரியா மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய வான்வெளி தாக்குதலில்10 பேர் உயிரிழப்பு

By: Karunakaran Thu, 19 Nov 2020 12:36:17 PM

சிரியா மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய வான்வெளி தாக்குதலில்10 பேர் உயிரிழப்பு

சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிழவி வருகிறது. மேலும், இரு நாட்டு எல்லைப்பகுதியில் ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற சிரியா கிளர்ச்சியாளர்கள்கள் மற்றும் ஈரான் புரட்சிப்படை பிரிவினர் பலர் பதுங்கியுள்ளனர்.

இவர்கள் சிரியாவில் இருந்தவாறு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களை அழிக்க இஸ்ரேல் ராணுவம் சிரியாவில் அவ்வப்போது விமானப்படைகள் தாக்குதல் நடத்துவதுண்டு.

10 people dead,israel,air strike,syria ,10 பேர் இறப்பு, இஸ்ரேல், விமானத் தாக்குதல், சிரியா

இந்நிலையில், இஸ்ரேலின் கோலன் பகுதியில் ராணுவ நிலைக்கு அருகே வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இது இஸ்ரேல் ராணுவத்தை தாக்க திட்டு வைக்கப்பட்ட இந்த வெடிகுண்டுகள் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களால் வைக்கப்பட்டுள்ளது.

அதன்பின், எல்லையோரம் அமைந்துள்ள சிரியாவின் ராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் நேற்று அதிரடி வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 3 சிரிய ராணுவ வீரர்கள், ஈரான் புரட்சிப்படையினர், ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் என மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர்.

Tags :
|