துருக்கியில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 18 பேர் காயம்
By: Monisha Mon, 15 June 2020 5:45:20 PM
துருக்கியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக 18 பேர் காயமடைந்துள்ளனர்
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து அமெரிக்கப் புவியியல் மையம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- துருக்கியின் கிழக்குப் பகுதிகளில் உள்ள கர்லிலோவா மாவட்டத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக 18 பேர் காயமடைந்துள்ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் குறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் நிலநடுக்கத்தால் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமாக துருக்கி அதிபர் எர்டோகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு, துருக்கியில் எலாஜிக் மாகாணத்தில் உள்ள சிவ்ரைஸ் நகரில் கடந்த ஜனவரி மாதம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 18 பேர் பலியாகினர். 500க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.