Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அர்மீனியா மற்றும் அசர்பைஜான் நாடுகளுக்கு இடையேயான சண்டையில் இதுவரை 69 பேர் உயிரிழப்பு

அர்மீனியா மற்றும் அசர்பைஜான் நாடுகளுக்கு இடையேயான சண்டையில் இதுவரை 69 பேர் உயிரிழப்பு

By: Karunakaran Tue, 29 Sept 2020 09:27:59 AM

அர்மீனியா மற்றும் அசர்பைஜான் நாடுகளுக்கு இடையேயான சண்டையில் இதுவரை 69 பேர் உயிரிழப்பு

ஒருங்கிணைந்த சோவித் யூனியனின் பகுதிகளாகவே இருந்த அர்மீனியா மற்றும் அசர்பைஜான் ஆகிய இரு நாடுகளும் 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்த பின்னர் தனித்தனி நாடுகளாக அறிவிக்கப்பட்டது. அர்மீனியாவில் கிருஸ்தவ மதத்தினரும், அசர்பைஜானில் இஸ்லாமிய மதத்தினரும் பெரும்பான்மையாக உள்ளனர். இரு நாடுகளையும் எல்லையாக பிரிக்கும் பகுதியில் நகோர்னோ-கராபத் என்ற மாகாணம் அமைந்துள்ளது.

இந்த மாகாணம் அசர்பைஜானின் அங்கம் என சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த மாகாணத்தில் பெரும்பாலானோர் அர்மீனிய ஆதரவாளர்களே வாழ்ந்து வந்தனர். இவர்கள் அசர்பைஜானில் இருந்து பிரிந்து சென்று அர்மீனியாவில் தான் சேரவேண்டும் என முடிவு செய்தனர். இதனால், சிறு குழுக்களாக இணைந்து அசர்பைஜானுக்கு எதிராக 1988 ஆம் ஆண்டு முதலே சிறு சிறு சண்டையில் ஈடுபட்டு வந்தனர்.

69 death,fight,armenia,azerbaijan ,69 மரணம், சண்டை, ஆர்மீனியா, அஜர்பைஜான்

நகோர்னோ-கராபத் மாகாணத்தை மையமாக கொண்டு அர்மீனியா மற்றும் அசர்பைஜான் இடையே போர் வெடித்தது. இந்த போரில் நகோர்னோ-கராபத் மாகாணத்தின் பெரும்பகுதியை அர்மீனியா கைப்பற்றியது. அதன்பின், அந்த மாகாணத்தை அர்மீனிய ஆதரவு மக்கள் நிர்வகித்து வந்தனர். மேலும், இதற்கு அர்மீனிய அரசும் உதவிகளை செய்துவந்தது. அன்றிலிருந்து நகோர்னோ-கராபத் மாகாணத்தை மையமாக கொண்டு பல ஆண்டுகளாக அர்மீனியா - அசர்பைஜான் இடையே மோதல்கள் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில் அர்மீனியாவின் கட்டுப்பாட்டில் உள்ள நகோர்னோ-கராபத் மாகாணத்தின் தலைநகரான ஸ்டெபனாஹெட் பகுதியில் அசர்பைஜான் ராணுவத்தினர் நேற்று முன்தினம் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் அர்மீனிய ராணுவமும் நேரடியாக இறங்கியுள்ளது. இந்த சண்டை காரணமாக பொதுமக்கள், இருநாட்டு படையினர் உள்பட பலர் உயிரிழந்து வருகின்றனர். தற்போது, நகோர்னோ-கராபத் மாகாணத்தில் நடந்து வரும் சண்டையில் இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 58 பேர் நகோர்னோ-கராபத் தன்னாட்சி மாகாணத்தில் உள்ள அர்மீனிய ஆதரவு படையினர், 9 பேர் அசர்பைஜான் நாட்டை சேர்ந்த பொதுமக்கள், மேலும், 2 பேர் அர்மீனிய நாட்டை சேர்ந்த பொதுமக்கள் ஆகும்.

Tags :
|