Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் ஆண்டிலாவது உலக நாடுகளிடம் கையேந்தாத நிலை வேண்டும்

வரும் ஆண்டிலாவது உலக நாடுகளிடம் கையேந்தாத நிலை வேண்டும்

By: Nagaraj Sat, 31 Dec 2022 6:48:37 PM

வரும் ஆண்டிலாவது உலக நாடுகளிடம் கையேந்தாத நிலை வேண்டும்

கொழும்பு: உலக நாடுகளிடம் கையேந்தாத நிலை வேண்டும்... 2023 ஆம் ஆண்டிலாவது உலக நாடுகளிடம் கையேந்தாத நிலைக்கு இலங்கை வளர்ச்சியடைய வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அதற்காக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான புதிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

colombo,archbishop,charge,nation,rulers ,கொழும்பு, பேராயர், குற்றச்சாட்டு, தேசம், ஆட்சி செய்தவர்கள்

புதிய கட்டமைப்பை உருவாக்கத் தவறினால் நாடு அழிந்துவிடும் என்றும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை எச்சரித்துள்ளார். இலங்கையுடன் சுதந்திரம் பெற்ற பல நாடுகள் முன்னேறியுள்ள போதும் இலங்கை ஒரு ஏழை நாடு என்ற பிம்பத்தைப் பெற்றுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதற்கு காலங்காலமாக தேசத்தை ஆட்சி செய்தவர்கள் எடுக்கும் தவறான முடிவுகளே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆகவே புதிய ஆண்டில் தேசத்தின் நலனுக்காக அனைத்து பிரஜைகளும் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும் என கொழும்பு பேராயர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags :
|
|