அச்சுறுத்தும் நிலநடுக்கம் .. தமிழக மக்களே கவனம்
By: vaithegi Wed, 01 Mar 2023 4:54:18 PM
வேலூர் : துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த பிப். 6-ம் தேதி பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஏராளமான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். துருக்கியை தொடர்ந்து இந்தோனேசியா, ஆப்கான், பப்புவா நியூ கினியா போன்ற நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்த வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளுக்கு வந்தனர்.
இதனை அடுத்து மற்ற நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள சிலப்பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இன்று அந்த மாவட்டத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் பங்கேற்ற அவர் ஏற்கனவே நிலநடுக்கம் வந்த பகுதிகளில் நில அதிர்வு மீண்டும் வரலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இது தொடர்பாக மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது என்று தெரிவித்துள்ளார். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலநடுக்கம் ஏற்பட கூடிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு வேறு இடங்களில் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர் கூறியுள்ளார்.